செவ்வாய், 24 அக்டோபர், 2017

தினம் ஓர் சிந்தனை

தைரியம் எண்ணற்ற எதிரியை கொன்று விடும்!!!!
ஏழு முறை விழுந்தாலும் எட்டாவது முறை எழு
தவறான பாதையில் வெகுதொலைவில் வந்தாலும் திரும்பிச்செல்!!!
வெற்றியை எதிர்நோக்கும் எண்ணம் இருந்தால் ஒற்றை சிறகிலும் பறக்கலாம்!!!
ஜெயிப்பது எப்படி என்று யோசிக்காதே! தோற்றது எதனால் என்று யோசித்து பார்!!! ஜெயிப்பது நீயாக மட்டுமே இருப்பாய்!!!
thairiyam க்கான பட முடிவு

படித்ததில் ரசித்தவை

* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் போராடும் வீரனைப் போல செயல்படுங்கள்.
* தன்னம்பிக்கையை இழப்பது என்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதை விட மோசமானது.
* அரை மனதுடன் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆர்வமில்லாத செயலால் நன்மை ஏற்படுவதில்லை.
* எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.
* எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.
* 'மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
படம்

நான் இதுவாகத்தான் ஆசை படுகிறேன்

vetri க்கான பட முடிவு

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது #வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார்.

அவர் காட்டிய திசையில், #தங்கஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.
பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.- அவ்வப்போது நாம் அதை #சீவுகிறோம். சீவும் போதெல்லாம் #கூர்மையடைகிறது.- தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.- வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.
பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.- தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.- வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.- கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

வாழ்க்கை நம் வசம்

        கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை...
அதற்குள் ஒருமுறை நல்லா வாழ்ந்து பார்த்திட வேண்டும் ...
நம்மால் சாதிக் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை ...அப்படி இருந்தால் அதை வேறு யாராலும் சாதிக்க முடியாது...
நீங்கள் தோல்வி  பெறும்பொழுது உங்கள் இலக்கை நினைத்து கொள்ளுங்கள்
அது உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்....

vaalkai க்கான பட முடிவு

குறைகள்

போதகர் ஒருவரிடம் கேட்டாள் ஒரு பெண்.." என் கணவர் நிறைய குறைகளோடுஇருக்கிறார்...அவரோடு என்னால் இனிஎன்னால் வாழமுடியாது,எனவே நான்அவரைவிட்டு விலகி விடட்டுமா?"..அவளுக்கு நேரடியாக பதில்சொல்லாத போதகர்."அம்மா! இங்குள்ள செடிகளில்ஏதாவது ஒன்றை உங்களுக்கு தர விரும்புகிறேன்,எது வேண்டும் கேளுங்கள்?" என்றார்..அப்பெண் ரோஜா செடியைக்கேட்டாள்...." அதைப் பராமரிப்பது மிகவும் கடினம், அதோடுஅதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே?இதுவா வேண்டும்?" என்று போதகர் கேட்டார்.."எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும், அதனால் அதனிடம் உள்ள குறைகள்பெரிதாகத் தெரியாதுஎன்றாள்.".புன்னகைத்த போதகர் சொன்னார்:." வாழ்க்கையும் அப்படிதான்!பிறரை நேசிக்கக் கற்றுக்கொண்டால்அவர்கள் குறை பெரிதாக தெரியாது !!!
kuraigal க்கான பட முடிவு

திங்கள், 23 அக்டோபர், 2017

படித்ததில் பிடித்தவை

உங்களுக்கு எந்தெந்த உரிமைகள் தேவை என்று கருதுகிறீர்களே...
அதே உரிமைகளை பிறருக்கும் வழங்குங்கள்...

சிறகடிக்க தொடங்கியவுடன் எந்த பறவை குஞ்சும்,
அதன் தாயிடம் கூட, இரையை பிச்சை கேட்பதில்லை...

வாழ்க்கை ஒரு வரம்.. காத்திருக்க, நினைக்க, மகிழ, வருந்த, விரல்கோர்த்து நடக்க, பழைய கதைபேச, ஊர் சுற்றித்திரிய... ஒரு உயிர்த்தோழி/தோழன் அமைந்தால்..

குறைகளை காண்பதை விட..
நிறைகளை கண்டு மகிழ்ச்சி அடைவோம்...!!!
படம்

பணம் / மனம்

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..!

சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
rich க்கான பட முடிவுவருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..!

இதில் யார்_பணக்காரர்...?!!

வெற்றியின் ரகசியம்



வாழ்க்கையில் வெற்றி அடையவே எல்லோரும் விரும்புகின்றனர். ஒரு சிலர் துடிக்கின்றனர் என்றும் சொல்லலாம். ஆனால் ஒரு சிலரே வெற்றிக் கனியைப் பறிக்கின்றனர். பலர் தோல்வியைத்தான் தழுவுகின்றனர்.

ஒரு சிலரால் மட்டும் எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற முடிகிறது? வெற்றி சூத்திரம் தான் என்ன?


வெற்றி சூத்திரம்:

வெற்றி என்னும் முக்கோணத்திற்கு கடின உழைப்பு, புத்திசாலித்தனம், வெற்றியை மட்டுமே பற்றிய சிந்தனை என்னும் மூன்று விஷயங்கள் தேவை.


vetri க்கான பட முடிவு

வாழ்வின் ரகசியம்

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன்,அதற்கு நீங்கள் தான் உதவி புரிய வேண்டும் குருவே ",என்று சீடன் ஒருவன் அந்த குருவிடம் சென்று நின்றான்...

"ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"என்று கண்ணீர் வடிததான்.

"தம்பி .. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்

எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

"புரியவில்லை குருவே.."என்றான் அந்த சீடன்

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."

"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. "

சீடன் தெளிவடைந்தான்

இதுதான் வாழ்வின் ரகசியம் கூட....

தொடர்புடைய படம்



நியாயம்



‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல்லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ – அம்மாஆவலுடன்,

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடு அப்ப தான் உனக்கு நிம்மதின்னு’ – அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னடா?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’
family க்கான பட முடிவுஅம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.யாரோ முகத்தில் அறைந்தது போல இருந்தது....

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நன்பனிற்க்கும் உயிர்தோழனிற்கும் என்ன வித்தியாசம் ?

நான்; இன்று தேர்வு சரியாக எழுதவில்லை. மதிப்பெண் கண்டிபாக குறைவாகதான் வரும்,மிகவும் வருத்தமாக உள்ளது!
நன்பன் ; விடு அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்.வருத்தம் வேண்டாம்!
உயிர் தோழன் ; இப்ப அதிகமா வாங்கி என்ன பன்ன போற? போட்டு விடு? வா சாப்ட போலா.பைத்தியோ!friend best friend க்கான பட முடிவு

(அவனை கவலையிலிருந்து விடுபட செய்பவன் நன்பன்! கவலையே உனக்கு இல்லை என்பவன் உயிர் தோழன்)

எ.கா2;
பாலு ; என காதல் தோல்வி அடைந்து விட்டது?
நன்பன் ; வாழ்வில் நீ இனி இதை பற்றி யோசிக்கக் கூடாது! முன்னேறி செல் யாரையும் திரும்பி பார்க்காதே!
உயிர் தோழன் ; போட நீ அவள பாக்கும்போதே தெரியு இப்புடி ஆகூனு !