மு. நித்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு. நித்யா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

மக்களின் கைத்தட்டல்

கேட்டு
மெய்மறந்து
சுவைத்திருப்போம்
எத்தனையோ
ராகங்கள்
தாளங்களை.....
இருந்தாலும்
மகிழ்ச்சியின்
எல்லைக்கே
கொண்டு
செல்லும்
மறக்க
முடியாத
ஓசை.....

# மக்களின் கைத்தட்டல் #

----மு. நித்யா.

சனி, 20 ஜனவரி, 2018

சட்டமன்றம்

சாமானிய
மக்களால்
என்றுமே
விலைக்கு
வாங்க
முடியாத
ஒரே
இடம்

# சட்டமன்றம் #

---மு. நித்யா

திங்கள், 25 டிசம்பர், 2017

சூரியன்

பனி
பொழியும்
குளிர்ந்த
காலை
பொழுதில்,,,
பூக்களின்
மெல்லிய
புன்னகையுடன்
வரவேற்பு...

# சூரியன் #

----மு. நித்யா

கல்லூரி பயணம்

மொட்டாக தோட்டத்துள்
தனியாக நுழைந்தேன்...!!!
மற்ற மொட்டுகளுடன்
பேச பேச மலர்ந்தேன்...!!!
அழகிய பூந்தோட்டமாக
உருமாறும் வேளையில்
வேறு ஒரு இடம்
நோக்கி பயணிக்க
தொடங்கிவிட்டோம்...!!!
பல இன்பங்கள்
துன்பங்கள்
பிரிவுகள்
நினைவுகள்
சுமந்து கொண்டே...!!!!!!!!!!

# கல்லூரி பயணம் #

---மு. நித்யா

மீனவன்

பிழைப்புக்காக
வீசிய
வலையில்,,,
வீசியவனே
உயிர்
பிழைக்க
போராடுகிறான்
நடுக்கடலில்....!!

# மீனவன் #

---மு. நித்யா.

மின்சாரம்

கூடவே
இருந்தபோது
எதுவும்
பெரிதாக
தோன்றவில்லை ....
ஒருநாள்
இல்லாத
போதுதான்
உணர்ந்தேன்,,
உன்
மாபெரும்
சக்தியை.....

# மின்சாரம் #

---மு. நித்யா.

விதை

எவரும் வாய்ப்பே தரவில்லை
நான் வளரமாட்டேன் என்று....!!
என்னையும் ஒருவர்
மண்ணில் விதைத்தார்,,,,
ஒருநாள் நானும்
முளைத்து வருவேன் என்று...!!
நானோ பல நாள்கள்
முயற்சி செய்தேன்...!!
இன்று
பூமிக்கு அடியில்
வேர் பிடி‌க்க
ஆரம்பித்து விட்டேன்...!!
விரைவில்
பூமிக்கு மேலேயும்
அவதரிப்பேன்,,
அனைவருக்கும்
பயன்தரும்
பெரிய மரமாக...!!!!

# விதை #

----மு. நித்யா.