செவ்வாய், 10 அக்டோபர், 2017

கருப்பு பணம்

நான் வெற்று தாளாக
இருக்கும் போது
என்னை மதிக்கவில்லை...
எனக்கு ஒரு வடிவம் தந்து
அடையாளம் தந்த பிறகு
என் மதிப்பு அதிகமானது...
என் மதிப்பு
கூடியதாலோ என்னவோ
தெரியவில்லை,
என்னை பதுக்க ஆரம்பித்தான்...
அப்போது தெரியவில்லை
இதனால் ஏற்படும் விளைவு
என்னவென்று...
அண்டை நாட்டை
பார்த்த போது தான் தெரிந்தது
என் மதிப்பு என்னவென்று...
என்னை வெளி கொண்டுவர
முயற்சி செய்தான்...
என் நிறத்தை மாற்றி பார்த்தான்,
இருந்தும் ஒரு நிறம் மட்டும்
இன்று வரை
வெளி வரவே இல்லை ......

# பணம் #

---மு. நித்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக