செவ்வாய், 10 அக்டோபர், 2017

அம்மா

நான் எப்படி இருப்பேன் என்று கூட
அவளுக்கு தெரியாது...
இருந்தும் என்னை உலகிற்கு
அறிமுகப்படுத்த அன்றே
அவளுடைய உயிருடன்
போராடியவள் அவள்....
ஒரு நாள் 
கோவிலுக்கு வா என்று
நீ அழைத்த போது
வர மனம் இல்லை...
ஏனென்றால்,,,
எனக்கு உயிர் கொடுத்த
கடவுள் நீ என் கண் முன்
நிற்கும் போது,,
எந்த உணர்வும்
இல்லாத
வெறும் கல்லை
எப்படி
வணங்குவது என்று......

# அம்மா #

---மு. நித்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக