வெள்ளி, 2 ஜூன், 2017

தி க்ரோஸ் வான்டிடி

Image result for காகம்

காகம் ஒன்று தனது நிறத்தை பற்றி கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது. எப்பொழுதுமே ``நான் கருப்பாக உள்ளேன்,பார்க்க அசிங்கமாக உள்ளேன்!’’ என்று புலம்பிக்கொண்டே இருந்தது.

            ஒரு நாள் மயில்கள் காகம் தங்கி இருக்கும் மரத்தடியில் வந்து உலாவிக்கொண்டு இருந்தன.பின்பு அவை சென்றிருந்த சில இடங்களில் இறகுகள் கிடந்தன.அதனை பார்த்து மீண்டும் மனம் வருந்தியது காகம்.அந்த இறகுகளை எடுத்துக்கொண்டு தனது நண்பனான குரங்கிடம் சென்றது.அதனின் உதவியுடன் தனது உடம்பில் சிறகுகளை பொருத்திக்கொண்டது.பின்னர் அந்த மயில் கூட்டத்திற்கு சென்று இப்பொழுது நானும் தங்களைப்போன்று தான் என்னையும் தங்களின் கூட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என கூறியது. ஆனால் அந்த மயில் கூட்டம் கோபம் கொண்டு அதனை விரட்டி விட்டது. காகத்தின் கூட்டமும் ``நீ என்னவாவாக இருக்கிறாய் என்பதில் பெருமைபடவில்லை’’ஆகையால் அந்த காகம் தனிமையிலேயே வாழ்ந்தது.
                                தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக