வியாழன், 6 ஏப்ரல், 2017

பிச்சைக்காரன்

                                       


            டேய்     கோவிந்தா  என்ன   கோலம்டா    இது ?    என்ற   பதறினார்  ராமன், கோவிலுக்குள்   போகும்போது   தெரியவில்லை  , வந்த   பொழுதுதான் கவனித்தார்   அங்கு   பிச்சையெடுப்பவர்களில்   தன்னுடைய   ஆருயிர் நண்பனும்   இருக்கிறானென்னு.
            வாடா   வீட்டுக்கு   என்று   கூப்பிட்டார்   ராமன்   .ஆனால்    ,ராமன், கோவிந்தன் வர   மறுத்து   விட்டார்   எனவே   அவரை   வற்புறுத்தி   தன்   வீட்டுக்கு அழைத்துச்   சென்றார்.
            சுமதி ,  இது   என்னோட   நண்பன்    கோவிந்தன்.  இனி   இவர் நம்முடன்தான்   தங்குவார்    என்றுத்  தன்   மருமகளிடம்   கூறினார்   ராமன்  அப்பொழுது   அவள்  ஒன்றும்   கூறாமல்   உள்ளே   சென்றுவிட்டாள்.
மாலை;
            சேகரிடம்   ,ஏங்க   உங்கம்மா   இறந்தப்பவே   உங்கப்பாவை   முதியோர்     இல்லத்தில்   சேர்த்து   விட்டுருக்கனும்   ,போனாப்  போவுது விட்டா   இப்ப   போற   வரவுங்கள   எல்லாம்   கூட்டிட்டு   வந்து   நிக்கறாரே இதுக்கு   மேல   பொறுக்க    முடியாது  உங்கப்பாவை   முதல்ல   எங்கவாது கொண்டு   போய்   விட்டுவிட்டு   வாங்க   , என்று   பொறிந்து   தள்ளினாள் சுமதி.

            இதக்   கேட்ட   ராமனிடம்   கோவிந்தன்  கூறினான்  டேய்   ராமா , இப்ப  இதே   நிலைமையில்    தான்டா   நானும்    இருந்தேன்   ,என்   மருமவ  கையில  சோறு    வாங்கி    சாப்பறதுக்கு    கோயில்    உட்கார்ந்து    பிச்சையெடுத்து  புண்ணியத்தைத்    தேடிக்கிலாம்    என்று    நிறுத்தி   நிறுத்தி    கூறினார்.  இதனுடைய    மறுமொழி   ராமனுடைய   கண்ணிராகவே   வெளிவந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக