திங்கள், 20 பிப்ரவரி, 2017

எதுக்கு அலைச்சல்..நாங்க இருக்கிறோம்..பேஸ்புக்...!!



➽ இன்றைய நவீன உலகில் மிகவும் முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுபவது வேலை இல்லா இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான்.

➽ இதுபோன்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளமான பேஸ்புக்... நாங்க இருக்கிறோம் எதற்கு உங்களுக்கு அலைச்சல்..! என்று அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.

➽ வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் பத்திரிகைகளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இனி அனைத்து வேலைவாய்ப்பு குறித்தும் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் ஏற்பாடு செய்துள்ளது.

➽ பேஸ்புக் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி பல ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் உதவுகிறது. அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

➽ முதல்கட்டமாக கனடா உட்பட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

➽ இதன்படி பேஸ்புக் இனிமேல் 'JOBS " என்ற புக்மார்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் இந்த பகுதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திறமையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். நல்ல விஷயம் அல்லவா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக