வெள்ளி, 2 டிசம்பர், 2016

டூ யு நோ ஸ்விம்மிங் ?

                                                            டூ யு நோ ஸ்விம்மிங் ?

ஒரு முறை கஞ்சதனமான ஞானி ஒருவர் எப்பொழுதும் மக்களை ``உனக்கு இந்த  வேலையைகூட செய்ய இயலவில்லை ? உங்களுக்கேல்லாம்  சமயத்தைபற்றியும் வாழ்க்கை தத்துவத்தை பற்றி ஏதுவும் தெரியவில்லை ஆகையால் உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது’’.என்று பழிப்பார்.ஒரு நாள் அவர் ஒரு வேலைக்காக ஆற்றை கடக்கவேண்டிய நிலை.அங்கு ஒரு சிறிய படகை கண்டார் அதனுள் ஏறி அமர்ந்தார்.அந்த படகின் உரிமையாளர் எனக்கு அதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.`` ! நீ என்னிடம் பணம் கேட்கிறாயா? நான்,செல்லும் வழியில் உனக்கு நிறைய அறிவுச்செல்வத்தை தருகின்றேன்’’ என்றார்.
            ``உனக்கு துளசி தாஸ்ஸை தெரியும் இல்லை இராமாயண் பற்றி ஏதாவது தெரியுமா?.....என்றார்.அவர் அவனுக்கு பணம் தருவதை தவிர்க்க நிறைய செய்திகளை அவனிடம் ``உனக்கு தெரியுமா?’’ என்றே கேட்டுக்கொண்டு வந்தார்.இந்நிலையில் நடூ ஆற்றில் சுழல் ஒன்னு வந்தது. அந்த படகு உரிமையாளரால் படகை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ஆகையால் அந்த ஞானியிடம்``உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’’ என்று கேட்டார்.அதற்கு அவர் ``எனக்கு தெரியாது’’ என்றார். இத்தனை விஷயங்கள் தெரிந்த உங்களுக்கு இந்த சிறு உயிர் காக்கும் கலை தெரியவில்லையே இப்போது நான் குதித்துவிடுவேன் தாங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?என்று கூறி குதித்தான்.அந்த ஞானி சுழலில் சிக்கி இறந்தார்.
                                                     
                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


1 கருத்து: