வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அன்னை தெரசா

                                                     

  அன்பு சுரக்கும் உள்ளமே
  அருளும் கருணை இல்லமே!

   ஆதரவற்றவர்களை தழுவுமே
  அன்னை தெரசா கரங்களே!

  தாயை இழந்த மழலைக்கும்!
  நோயில் புரளும் மனிதர்க்கும்!

  சேவை செய்ய நீளுமே
  அன்னை தெரசா கரங்களே!

  உயிர்களிடத்தில் அன்பினை
  மீட்ட வந்த தேவதை!

  தியாக மெனும் சேவையை
  காக்க வந்த தாய்மையே!
  நீ மீண்டும் வந்து பிறக்கணம்
  ஆதரவற்றோர் அனைவரும்

  உன் அன்பு மழையில் நனையணும்!

3 கருத்துகள்: