புதன், 10 பிப்ரவரி, 2016

வணிக கண்காட்சி 2016


பெரியார் பல்கலைக் கழக வணிகப் படிப்பு புலம் (10.02.2016) இன்று ’வணிக கண்காட்சி 2016’ நிகழ்வினை பெரியார் பல்கலைக் கழக கலை அரங்கில் நடத்தினர்.இக்கண்காட்சியில் 100 க்கும்அதிகமாக பல்வேறு  துறைகள் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. 



மேலும்  அந்த கண்காட்சியில் ஒரு புலத்தைக் கண்டு வியந்துப் போனேன், அதாதவது  ஒரு பையன் ஏழை விவசாயி போன்ற உடையில் ஒரு மண்வெட்டியை தோளில் சுமந்து அந்த விவசாயிக்கு நேர்ந்த  துன்பத்தை அழகாக காட்சிப்படுத்தினார்.விவசாய நிலம், தொழில் நுட்பமாக மாறியதால் விவசாயி அடையும் துயரம் அருமையான காட்சிப்படுத்தினார்.



 காப்பீடுக் குறித்து,தூண்டும் விதத்தில் புத்தங்களையும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.விண்வெளியிக்கு சென்றால் எப்படி இருக்கும் அதாவது கோள்களைக் குறித்தும் ஒரு புலம் இருந்தது.வியாபார நுணுக்கத்தோடும் இக்கண்காட்சி அமைந்தது.



வாகனப்புகையால்  காற்று மாசடையாமல் எவ்வாறு தடுப்பதுக் குறித்தும் ஒரு புலம் அமைக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக